தெலுங்கானாவுக்கு எதிராக போராட்டம் மற்றும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள், ஆந்திராவை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் பாய்லின் புயல் காரணமாக பணிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனராம்.
ஆந்திர மாநில அரசும் பாய்லின் புயலின் ஆபத்திலிருந்து தனது மாநில மக்களைக் காக்க அதிரடி நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. பாய்லின் புயல் தாக்கக் கூடிய பகுதிதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தெலுங்கானா என்ற அரசியல் சூறாவளியில் சிக்கித் தவிக்கும் ஆந்திர மாநிலம் தற்போது பாய்லின் புயலின் தாக்குதலை சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் புயல் தாக்க்க கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து புயல் தாக்கக் கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை எதிர்த்து ஆந்திராவில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பெருமளவில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். மின்வாரிய ஊழியர்களும் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளதால் பல பகுதிகளில் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புயல் வருவதால் பலர் ஸ்டிரைக்கிலிருந்து தற்காலிகமாக விலகி பணிக்குத் திரும்புகின்றனராம்.
மின்வாரி ஊழியர்களின் ஸ்டிரைக் காரணமாக ஆந்திராவின் சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களிலும் மின் விநியோகம் படு மோசமாக உள்ளது. பல பகுதிகளில் மின்சாரமே இல்லை. இதனால் மருத்துவமனைகள், ரயில் போக்குவரத்து உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. பல லட்சம் பேர் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில்தான் புயல் வேறு அங்கு பீதியைக் கிளப்பியுள்ளது.
இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள புயல் அபாயம் காரணமாக மக்களுக்கு பாதிப்பு வராத வகையில் தற்போதைக்கு பணிக்குத் திரும்புவதாக பல வருவாய்த்துறை ஊழியர்கள், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் முழு அளவில் பணியாளர்கள் பணிக்குத் திரும்பாததால் அரசுத் தவித்துக் கொண்டிருக்கிறது.
Read more at: http://tamil.oneindia.in/news/india/andhra-braces-cyclone-phailin-striking-officials-return-to-work-185124.html
தெலுங்கானா என்ற அரசியல் சூறாவளியில் சிக்கித் தவிக்கும் ஆந்திர மாநிலம் தற்போது பாய்லின் புயலின் தாக்குதலை சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் புயல் தாக்க்க கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து புயல் தாக்கக் கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை எதிர்த்து ஆந்திராவில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பெருமளவில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். மின்வாரிய ஊழியர்களும் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளதால் பல பகுதிகளில் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புயல் வருவதால் பலர் ஸ்டிரைக்கிலிருந்து தற்காலிகமாக விலகி பணிக்குத் திரும்புகின்றனராம்.
மின்வாரி ஊழியர்களின் ஸ்டிரைக் காரணமாக ஆந்திராவின் சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களிலும் மின் விநியோகம் படு மோசமாக உள்ளது. பல பகுதிகளில் மின்சாரமே இல்லை. இதனால் மருத்துவமனைகள், ரயில் போக்குவரத்து உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. பல லட்சம் பேர் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில்தான் புயல் வேறு அங்கு பீதியைக் கிளப்பியுள்ளது.
இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள புயல் அபாயம் காரணமாக மக்களுக்கு பாதிப்பு வராத வகையில் தற்போதைக்கு பணிக்குத் திரும்புவதாக பல வருவாய்த்துறை ஊழியர்கள், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் முழு அளவில் பணியாளர்கள் பணிக்குத் திரும்பாததால் அரசுத் தவித்துக் கொண்டிருக்கிறது.
Read more at: http://tamil.oneindia.in/news/india/andhra-braces-cyclone-phailin-striking-officials-return-to-work-185124.html
No comments:
Post a Comment