தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்.ஜே.டி) தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் இத்தண்டனையை வரவேற்றுள்ளனர். லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தினரோ, இத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று கூறியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனோஜ் ஜா, நாங்கள் எப்போதும்போல ஒற்றுமையுடன் இருக்கிறோம். எங்களது ஆதரவு தளம் அப்படியே இருக்கிறது. லாலுதான் எங்களது தலைவர். லாலு மிகவும் அப்பாவி. நாங்கள் மேல்முறையீடு செய்வோம் என்றார்.
அக்கட்சியின் மூத்த தலைவர் ரகுவன்ஸ் பிரசாத், நிச்சயம் லாலு பிரசாத் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறூகையில், ஊழல்வாதிகள் சட்டத்தின் பிடியில் சிக்கியே தீர வேண்டும் என்பதை இத்தண்டனை விவரம் உறுதிப்படுத்தியிருக்கிறது என்றார்.
காங்கிரஸ் கட்சியின் ஜெகதாம்பிகா பால், ஊழல் முறைகேடுகளில் சிக்கினால் இதுபோன்ற தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்பதை எம்.எல்.ஏ, எம்.பிக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
Read more at: http://tamil.oneindia.in/news/india/we-will-appeal-higher-court-against-lalu-conviction-rjd-184675.html
Read more at: http://tamil.oneindia.in/news/india/we-will-appeal-higher-court-against-lalu-conviction-rjd-184675.html
No comments:
Post a Comment